Tuesday, July 27, 2010

சிலையோ ஓவியமோ

வடித்த சிலையோ
வரைந்த ஓவியமோ என்று
சிந்தித்து கொண்டிருந்தேன்
காற்றை சாக்கை வைத்து
உன் கன்னத்தில் முத்தமிட வந்த
உன் கூந்தலை
காதுக்கு பின்னால்
ஒதுக்கிவிட்டு சென்றாயே
அதை பார்த்த பின்
தானடிஉணர்ந்து
கொண்டேன்
இது உண்மை என்று !!!!!!!!!!!


இரு மீன்கள்

விரித்த வலையில்

மாட்டிக்கொண்ட

மீனவன் நான்






Friday, July 16, 2010

செவ்விதழ்

உன் செவ்விதழ் பட்ட பின்னரே
தன்னிதழ் விரிப்பேன் என
காத்திருக்கிறது கண்ணீருடன்
பாவமடி இந்த மலர்குழந்தை
கொடுத்துவிடு
உன் இதழ் கொண்டு
ஒரு முத்தம

Thursday, July 8, 2010

காகிதம்





உன்னை நினைத்தே
உயிர் விடுகிறது
என் பேனா
அதில் உயிர்
பெறுகிறது
ஒரு
வெள்ளை காகிதம்

நாட்குறிப்பு

எனது நாட்குறிப்புக்கு
உனது பெயர்தானடி
என் காதலை
அதனிடம் மட்டுமே
சொல்வதால்

Tuesday, July 6, 2010

நாணம்

மண்ணையே பார்த்து செல்கிறது
உனது கண்
உன்னையே பார்த்து செல்கிறது
இந்த மண் ...................