Tuesday, July 31, 2012

எங்கிருந்து வந்தாயடி...................

வார்த்தைகளே இன்றி வாதமும் விவாதமும்
நமது பார்வையில்

தவறுகளின் இருப்பிடமாய் இருந்த எனது தனிமை
இன்று உன் நினைவுகளை சுமக்கும்
அருங்கட்சியாய் ஆகிப்போனதடி

எனது ஒவ்வொரு அசைவுகளுக்குமிடையே
உனது நினைவுகள் வந்துபோகிறது
சந்த  பிழையாய்

எனக்கு யாரோ வைத்த எனது பெயர்கூட
அழகாய் இருந்தது
நீ உச்சரிக்கும்போது

உணர்வுகளை தின்றும் உயிர் வாழமுடியும் என்று
எனக்குனர்த்தியவளஎங்கிருந்து வந்தாயடி...................

Saturday, August 21, 2010

புதிதாய்..........

புதிதாய் ஆடைகள்
அணிந்தபின்
என்னிடம் கேட்கிறாய்
அழகாய் இருக்கிறதா என்று
உன்னை அணிந்த பின்
புது ஆடைகள் கூட
கொஞ்சம்
அழகாய் தான் இருக்கிறது

Tuesday, July 27, 2010

சிலையோ ஓவியமோ

வடித்த சிலையோ
வரைந்த ஓவியமோ என்று
சிந்தித்து கொண்டிருந்தேன்
காற்றை சாக்கை வைத்து
உன் கன்னத்தில் முத்தமிட வந்த
உன் கூந்தலை
காதுக்கு பின்னால்
ஒதுக்கிவிட்டு சென்றாயே
அதை பார்த்த பின்
தானடிஉணர்ந்து
கொண்டேன்
இது உண்மை என்று !!!!!!!!!!!


இரு மீன்கள்

விரித்த வலையில்

மாட்டிக்கொண்ட

மீனவன் நான்






Friday, July 16, 2010

செவ்விதழ்

உன் செவ்விதழ் பட்ட பின்னரே
தன்னிதழ் விரிப்பேன் என
காத்திருக்கிறது கண்ணீருடன்
பாவமடி இந்த மலர்குழந்தை
கொடுத்துவிடு
உன் இதழ் கொண்டு
ஒரு முத்தம

Thursday, July 8, 2010

காகிதம்





உன்னை நினைத்தே
உயிர் விடுகிறது
என் பேனா
அதில் உயிர்
பெறுகிறது
ஒரு
வெள்ளை காகிதம்

நாட்குறிப்பு

எனது நாட்குறிப்புக்கு
உனது பெயர்தானடி
என் காதலை
அதனிடம் மட்டுமே
சொல்வதால்